சிவமொக்கா பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஒருவர் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவமொக்கா நகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இருப்பினும் ஆஷா கொலைக்கு நீதிகேட்டு போராட்டக்காரர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீவைப்பு, குண்டுவீச்சு சம்பவம் நடந்து வருகிறது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க படுவதாகவும் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்க விடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை காலை வரை அமலில் இருக்கும் எனவும் அதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆஷா கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 26 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக எஸ்.ஐ கூறியுள்ளார்.