Categories
அரசியல்

14 மாதம் ஆயிடுச்சி… அப்படி என்ன சாதித்து விட்டார் ஸ்டாலின்….? கடுமையாக விமர்சனம் செய்யும் இபிஎஸ்…!!!!!!!!!

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து சென்னை திரும்பும் வழியில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அதன்பின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றி  உள்ளார். அதாவது ஒரு சாதாரண கிளை செயலாளராக இருந்த நான் இயக்கத்தின் இடைக்கால பொது செயலாளராக வந்திருக்கின்றேன் என்றால் அது அதிமுகவில் மட்டும்தான் நடக்கும்.

திமுகவில் இப்படி வர முடியுமா வந்துவிட முடியுமா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநதி எல்லாம் நிதி அற்புதமான பெயர்கள் அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஆனால் திமுக கட்சியில் அப்படி இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி இன்றைக்கு தமிழக மக்களின் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருப்பது பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் ஜெயலலிதா இவர்கள் தமிழகத்தை ஆண்டபோது ஏராளமான நன்மைகள் கிடைத்தது. நான்கு வருடங்கள் இரண்டு மாதங்கள் ஆட்சியில் இருந்தபோது முப்பெரும் தலைவர்களின் கனவுகளையும் நினைவாக்கினோம். தற்போதைய திமுக அரசு 14 மாதங்களைக் கடந்து ஆட்சி நடத்தி வருகின்றது.

நாட்டிலேயே முதன்மை முதலமைச்சராம் ஸ்டாலின் எதிலே லஞ்சம் வாங்குவதிலா? இந்தியாவில் பல மாதங்கள் இருந்தும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். மேலும் ஸ்டாலினுக்கு அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் நீங்கள் முதலமைச்சராகி உள்ளீர்கள் அதை உருப்படியாக செய்யுங்கள் கிடைக்கின்ற பதவி வைத்து மக்களுக்கு நன்மை செய்து பாராட்டை பெறுங்கள். ஸ்டாலினுக்கு அரசாங்கத்தை பற்றியும் தெரியாது நாட்டைப் பற்றியும் தெரிவது எல்லா திட்டங்களையும் வேகமாக அறிவிப்பார். அறிவித்த உடனே அதற்கு குழு அமைத்து விடுகின்றார். இதுவரைக்கும் 37 குழுக்கள் அமைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் வருடத்திற்கு 20,000 கோடி சம்பாதிக்கின்றார்கள். ஓராயிரம், ஈராயிரம் இல்லை அதிலிருந்து ஒரு பகுதி திமுகவிற்கே வருகின்றது. அதனால் தான் மக்களிடம் கருத்து கேட்க வேண்டுமாம் சூதாட்டத்திற்கு கருத்து கேட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |