ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் சுனாமுஹின் பகுதியில் உள்ள பள்ளியில் கணிதாசிரியராக பணியாற்றி வருபவர் கல்பதரு மல்லிக். இவர் எட்டாம் வகுப்பு மாணவரிடம் கணித பாடத்தில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் சரியாக பதிலளிக்காத காரணத்தினால் 14 மாணவர்களை அடித்திருக்கிறார். அவர்களின் நான்கு பேருக்கு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இது பற்றி தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் மாணவர்களை தான் அந்த அளவுக்கு அடிக்கவில்லை என்றும், அவர்கள் மிகைப்படுத்தி கூறுகிறார்கள் எனவும் ஆசிரியர் கல்பதரு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.