Categories
உலக செய்திகள்

“ஒட்டகம் திருடியதால் வெடித்த கலவரம்!”…. 25 பேர் பலியான கொடூரம்….. சூடானில் பயங்கரம்….!!

ஒட்டகம் திருடிய சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்குடையில் நடந்த மோதலில் 25 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டில், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து, உள்நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே, பழங்குடியின மக்கள்
தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், தற்போது போர் பதற்றம் சிறிது குறைந்திருக்கிறது. எனவே, அந்த மக்கள் மீண்டும்  தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பு, இவர்களால் கைவிடப்பட்ட பகுதிகள், வேறு மக்களால் கைப்பற்றப்பட்டது.
எனவே, அந்த நிலங்களுக்கான உரிமையாளர்களுக்கும், கைவிடப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சூடானில் உள்ள டாரப் மாகாணத்தின், ஜபல் மூன் பகுதியில் ஒட்டகத்தை திருடியதாக இரண்டு தரப்பினரும் சண்டையிட்டுள்ளனர். அந்த சண்டை மோதலாக மாறி, சுமார் 25 நபர்கள் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து, மேற்கு டாரப் மாகாணத்தில் இருக்கும் பல இடங்களில் ஏற்பட்ட கலவரங்களில், மொத்தமாக 138 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |