Categories
மாநில செய்திகள்

130 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட…. கொரோனா சிகிச்சை மையம் திறப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது.

இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு திறந்து வைத்து வருகிறது. இந்நிலையில்தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சைதாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடனான 130 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இதில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Categories

Tech |