சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்புத்துரைச் சார்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் மாயவன் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக பழனிக்கு வரும்போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மாயவன் என்ற வேன் டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.