Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொட்டை அடிக்க கூடுதல் பணம்”13 பேர் சஸ்பெண்ட்..!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடமும் மொட்டையடிக்க கூடுதலாக பணம் வசூலித்த 13 பேரை கோவில்நிர்வாகம் சஸ்பண்ட் செய்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாக     சமயபுர மாரியம்மன் கோவில் மக்களால் பார்க்கப்படுகிறது   . இக்கோவிலில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் .இதில் பெரும்பாலானோர்  மொட்டையடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் மொட்டை அடிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மொட்டை அடிப்பவர்கள் பக்தர்களிடம் காணிக்கையாக ரூபாய் 30 மட்டுமே வாங்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.ஆனால் அதனை மீறி மொட்டை அடிப்பவர்கள் அதிக பணம் வசூல் செய்வதை உறுதி செய்த கோவில்      நிர்வாகம்   13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக சுமார் 64 பேர் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |