Categories
மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் வெளியாகிறது “12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்”… அமைச்சர் செங்கோட்டையன்!!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். முன்னதாக 12ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

ஒரே ஒரு பாடத்தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், விடுபட்ட 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஏற்கனவே நடந்துமுடிந்த 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி முதல் தொடங்கப்பட்டன.

சுமார் 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் நடைபெற்றது.48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 11ம் தேதி நிறைவடைந்துள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணியானது 10 நாட்களுக்குள் நிறைவடையும். ஜூன் 20ம் தேதிக்கு பிறகு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. இதை நிலையில், ஜூலையில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |