12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளதாக தகவல் வழியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக அறிவிப்பை அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று தங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்த போது , அதில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்தது மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
வேதியல், கணினி அறிவியல், இயற்பியல் பாடங்களில் மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை காட்டிலும் குறைவாக மதிப்பெண்களை கணக்கிட்டு ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கியிருப்பதாக கூறியுள்ளது. தேர்வில் குறைவாக மதிப்பெண்களை வாங்கி உள்ளதை மாணவர்கள் கண்டறிந்து சமூக வலைதளங்களை தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். விடைத்தாள் திருத்துதலில் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண் குறைத்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படாது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.