Categories
மாநில செய்திகள்

12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு…. ஜூன் மாதம் வெளியீடு…. வெளியான தகவல்…!!!

திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக நிறைவடைந்து தற்போது அச்சிடும் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும், மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படுகிறது.

இந்த மாதத்திற்குள்ளாக அச்சிடும் பணி நிறைவடைந்து ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழர்களுடைய பண்பாட்டை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |