Categories
மாநில செய்திகள்

12 இந்திய மீனவர்களை விடுவிக்க…. மத்திய வெளியறவுத்துறை அமைச்சருக்கு…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இலங்கை கடற்பறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மீனவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மாநில கடலோர எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது. அதன்பிறகு இலங்கை கடற்பறையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Categories

Tech |