Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினா வங்கி வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு வினா வங்கி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அனைத்து பாடங்களுக்கும் வினா வங்கியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாணவர்கள் வினா வங்கியை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |