தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் ஆகாத கோவில்களை கணக்கெடுத்து, அதை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் கோவில் புணர அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.