Categories
Uncategorized

மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,002 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது: நிர்மலா சீதாராமன்!!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல சாலையோர வியாபாரிகள், சிறிய வியாபாரிகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகிறார்.

சுயதொழில் செய்து வருபவர்களுக்கும் இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், பிரதமரின் தன்னிறைவு இந்தியா என்கிற திட்டத்தின் அடிப்படையில் இன்றைய அறிவிப்புகள் இருக்கும் என நிதியமைச்சர் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

* மார்ச் முதல் வேளாண் உற்பத்தி திட்டங்களுக்காக மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு ரூ.6,700 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,002 கோடியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அறிவிப்பு:

* புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தோம்.
* நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
* நகர்புறத்தில் வீடில்லாத ஏழைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு மார்ச் 28ம் தேதி முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது.

ஊரடக வளர்ச்சி திட்டத்தின் அறிவிப்பு:

* மே 13ம் தேதி வரை 14.62 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
* வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு உள்ளூரில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி கொடுக்கும் செயல்முறை துவங்கியது.
* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தற்போதைய செலவு மட்டும் ரூ.10,000 கோடி ஆகும்.
* நேற்று மட்டும் 1.87 லட்சம் கிராமங்களில் 2.33 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
* மழை காலங்களிலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த திட்டம்.
* வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182 ல் இருந்து இந்த ஆண்டு ரூ.202 ஆக அதிகரித்துள்ளது.
* மார்ச் முதல் வேளாண் உற்பத்தி திட்டங்களுக்காக மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு ரூ.6,700 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சுயஉதவி குழுக்களுக்கான அறிவிப்பு:

* 12,000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
* 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர்- சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ம் தேதிக்கு பிறகு 7,200 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

விவசாயிகளுக்கான அறிவிப்பு:

* விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய அவகாசம் 1ல் இருந்து மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* 25 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
* ஏற்கனவே 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
* 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின் படி சுமார் 3 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
* சுமார் 4.22 லட்சம் கோடி அளவிற்கு கடந்த 3 மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன.
* மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் 86,600 ஆயிரம் கோடி ரூபாய் வரை வேளாண்மை கடன் வழங்கப்பட்டுள்ளது.
* நபார்டு உள்ளிட்ட வங்கிகள் மூலமாக விவசாயத்துறைக்கு கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது
* ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது

Categories

Tech |