கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார்.
மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும் அப்பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.