தமிழகத்தில் கொரோனோவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 14,316 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 787 பேர் ஆண்கள், 498 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 16,181 ஆண்களும், 9,677 பெண்களும், 14 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 44 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 73 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயதுக்குட்பட்ட 1,437 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 21,899 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,536 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.