வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் உறவினர்களை சந்திப்பதற்காக ஒரு குடும்பம் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்புவதற்காக வேன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் வந்த வேன் பஞ்சாப் மாகாணத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த மியான்வாலி கால்வாயில் கார் திடீரென கவிழ்ந்து உள்ளது.
பின்னர் வேன் மெதுவாக நீருக்குள் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் 7 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 1 ஆண் உட்பட மொத்தம் 11 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அந்த வேன் டிரைவர் வேனை வேகமாக ஓட்டியதால் அது கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்துள்ளது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.