Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

11 மாவட்டம்…. உயிரிழந்த 61பேர்…. சோகத்தில் தமிழகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1571ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 70,017 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24,052ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் வீதம் 57.90 %ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாவட்ட வாரியாக உயிரிழந்தவர் விவரம்:

சென்னை- 30

செங்கல்பட்டு- 8

மதுரை- 7

திருவள்ளூர்- 5

காஞ்சிபுரம் – 3

திருவண்ணாமலை – 3

தூத்துக்குடி – 1

விருதுநகர் – 1

திருச்சி – 1

ராமநாதபுரம் – 1

விழுப்புரம் – 1

Categories

Tech |