Categories
Uncategorized

11போலீஸ் ஸ்டேஷன்…! 20இடத்தில் 101 …. 10லட்சம் மதிப்பில் ஆடு திருட்டு…. சிக்கிய களவாணி கும்பல் ..!!

தூத்துக்குடியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பலின் உண்மை சிசிடிவி காட்சியினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, குரும்பூர், கயத்தாறு, சாயர்புரம் சேரகுளம் , திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர்.

தொடர்ந்து வரும் புகாரால் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆடுகளை திருடியவர்களை விரைந்து கைது செய்ய விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து தனிப்படையினர் ஆடுகள் திருடு போன பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வேம்பார் சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடுகளை அவர்களது கார்களில் திருடிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 50,00,000 ரூபாய் மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது நாசர் என்பவரின் மகன்களான முகமது அராபத் மற்றும் ஆஷிக் ஆகிய இருவரும் காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகின்றனர்.

இந்த மட்டன் கடைகளுக்கு ஆடுகளை திருடிக்கொண்டு வந்து கொடுப்பதற்காக முகமது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டி செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் அதே போன்று ஆஷிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ் ஆறுமுகம் மற்றும் ஆசிக் ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆடுகளை திருடி வந்துள்ளது தெரியவந்தது.

இந்த கும்பல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 20 இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியது தெரிய வந்துள்ளது. மேலும் ஆடுகளை திருடிய பெண், ஆடுகள் கத்தாமல் இருக்க வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டி திருடிய கொள்ளையர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆடுகள் திருடிய நபர்களை கைது செய்து திருடுபோன ஆடுகளை மீட்ட விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Categories

Tech |