Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 18 மாதங்களுக்குப் பின்னர் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வரும் நிலையில், நடுநிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்கப் படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்பட்டால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும். ஆனால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. பொதுத் தேர்வுக்கு முன்னர் டிசம்பர் மாதம் ஒரு தேர்வு நடத்தப்படும். மேலும் திட்டமிட்டபடி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |