Categories
மாநில செய்திகள்

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை என்று தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற இருக்கிறது. மேலும் திருப்புதல் தேர்வு ஜனவரி 31-ம் தேதிக்கு பின் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |