ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 100 ரன்களுடன் விளையாடி வருகிறது.
ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 47 (32) ரன்களும், குவிண்டன் டிகாக் 81 (52) ரன்களும் குவித்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியாக விளையாடி 28* (11) ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், ரஹானேவும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். பவர் பிளே முடிந்ததும் ரஹானே 37 (21) ரன்களில் க்ருனால் பாண்டியா பந்து வீச்சில் சூர்ய குமார் வசம் பிடிபட்டார் . அதன் பின் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். தற்போது ஜாஸ் பட்லர் 50 (29) ரன்களும், சஞ்சு சாம்சன் 10 (10) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.