சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன் கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு 10 கோடி நிறுவன செல்போன்களுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளார். ஏற்கனவே சென்னை – ஆந்திரா செல்லும் லாரிகளை மடக்கி செல்போனை கொள்ளையடித்து வந்தனர் . MI நிறுவனத்தின் செல்போன்களை குறிவைத்து கொள்ளை அடிப்பது தொடர்கதையாகிறது.