Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி”…. போலீசார் மீட்பு….!!!!!

10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் 10 லட்சம் கடன் தருவதாகவும் அதற்காக ஆதார் எண், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம் உள்ளிட்டவற்றை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதை முருகேசன் நம்பியுள்ளார்.

இதையடுத்து 1 லட்சத்து 40 ஆயிரத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து முருகேசனும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கடன் தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் முருகேசன் மோசடி செய்த பணத்தை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 1 லட்சத்து 40 ஆயிரத்து மீட்டு முருகேசனின் வங்கிக் கணக்கில் திரும்பி செலுத்தினார்கள்.

Categories

Tech |