உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 2
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
அரைக்க தேவையானவை:
சோம்பு – 1/2 ஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/2 கப்
இஞ்சி,பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 2 கிராம்பு – 2
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, நன்கு பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து, அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து, நன்கு அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்தப்பின், அதனுடன் பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி.