Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 அடி பள்ளத்தில் உருண்ட பொக்லைன் எந்திரம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…ஈரோட்டில் பரபரப்பு..!!!

பர்கூர் மலைப்பகுதியில் 10 அடி பள்ளத்தில் இருந்து  பொக்லைன் எந்திரம் உருண்டு விழுந்த நிலையில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பூபதி(22). இவர் ஊசிமலை பகுதியில் இருந்து பவானி அருகில் உள்ள ஜம்பைக்கு பொக்லைன் எந்திரத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது  பர்கூர் மலைப்பாதையில் இருக்கும் ஒரு வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இதனையடுத்து பூபதி சாதுரியமாக வண்டியிலிருந்து எட்டி குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பள்ளத்தில் இருந்த பொக்லைன் எந்திரத்தை மேலே கொண்டு வருவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |