Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 அடி நீள மலைப்பாம்பு…. தொழிலாளர்கள் அதிர்ச்சி…. உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்….!!

தோட்டத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் குரங்கணி சாலையில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தோட்டத்தில் புகுந்து உள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோட்டத்தில் பதுங்கிய பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தோட்டத்தில் புகுந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்துள்ளனர். இதற்குப் பின்னர் அந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

Categories

Tech |