Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயம்?…. எதிர்க்கும் மாணவர்கள் அமைப்பு…..!!!!!

இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவுக்கு வட கிழக்கு மாணவர்கள் அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் புது டெல்லியில் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா “அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அங்குள்ள பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக” தெரிவித்தார். இந்நிலையில் 10ம் வகுப்பு வரை  இந்தியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என வடக்கு கிழக்கு மாணவர்கள் அமைப்பு கடு,மையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதாவது 8 மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பான வடக்கு, கிழக்கு மாணவர்கள் அமைப்பு (நேசோ), தங்களது கடுமையான எதிர்ப்பை உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து உள்ளனர். அதில் “அந்த அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா மற்றும் பொதுச்செயலாளர் சினம் பிரகாஷ் சிங் போன்றோர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேசோ அமைப்பு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது “இந்த சாதகமற்ற பொருந்தா  கொள்கையை உடனே திரும்பப்பெற வேண்டும். இந்த நடவடிக்கை பூர்வீகம் மொழிகளுக்கு கேடு விளைவிக்கும் மற்றும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும். ஆகவே 10ம் வகுப்பு வரை சொந்த மாநிலங்களில் உள்நாட்டு மொழிகள் கட்டாயமாக்கப்பட வேண்டுமே தவிர்த்து இந்தி ஒரு விருப்பப் பாடமாக மட்டுமே இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.

இந்தியாவில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் 40-43 % பேர் இருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனினும் அதேசமயம் நாட்டில் பெரும்பாலான மற்ற மொழிகள் இருக்கின்றன. அவை வளம் ஆனவை, செழிப்பானவை மற்றும் அவற்றின் சொந்த கண்ணோட்டத்தில் துடிப்பானவையாகும். அவையே இந்தியாவிற்கு ஒருபன்முக மற்றும் பன்மொழி தேசத்தின் பிம்பம் அளிக்கிறது. இந்தி கட்டாயமாக்கப் படுவதால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். எங்களது அமைப்பு இந்தக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசானது இத்தகைய நடவடிக்கைகளுக்கு பதில், இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் இணைப்பது, வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான கூடுதல் திட்டங்கள் ஆகிய வடகிழக்கின் பூர்வீக மொழிகளை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |