Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு மாணவனை…. இரும்புக் கம்பியால் அடித்த போதை ஆசாமி…. பக்கோடா கடையில் நடந்த கொடூரம்..!!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பள்ளி மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் சிவா என்ற பத்தாம் வகுப்பு மாணவன் படித்து வருகிறார். அவர் தனது தந்தை உடன் பக்கோடா ஸ்டாலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த ஒரு நபர் சிவாவின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கீழே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவர் தந்தையை மட்டுமல்லாமல் அங்கிருந்த சிவாவின் தலையிலும் பலமாக தாக்கியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .பரிசோதித்த மருத்துவர்கள் சிவா  ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மேலும் அவரது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |