நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலும் முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகள் குறித்து ஒரு சில மாநிலங்கள் மட்டுமே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்ற புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்களும் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். 1,3,5,7 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் பள்ளி செயல்படும். 2,4,8 ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.