தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசின் இந்த தீவிர முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளும் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10,11,12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. என்னதான் கொரோனா பரவல் குறைந்தாலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. வரும் கல்வியாண்டு தான் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.