தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 44 வது ஆண்டை குறிக்கும் விதமாகவும் தற்பொழுது உலகம் முழுவதும் பேமஸ் ஆகி உள்ள தம்பி பொம்மையின் உருவத்திலேயே 44 கிலோ எடையுள்ள ஒரு இட்லியை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த இட்லியில் சிறு தானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இன்று பலரும் சிறு தானியங்களை மறந்து துரித உணவகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அதே வேளையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தம்பி உருவத்திலேயே இட்லியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்காக 24 மணி நேரம் செலவு செய்து இந்த ஒரு இட்லியை தயார் செய்திருப்பதாகவும் இனியவன் கூறினார்.