Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

100% தடுப்பூசியில் முதலிடம்…. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்…. வட்டார மருத்துவ அலுவலர் செயல்….!!

100 % தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் சுகாதாரதுறை சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் தாலுகாவிற்கு உட்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் மொத்தமாக இருக்கும் 188 குடும்பங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 797 நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 538 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இம்மாவட்டத்தில் 100 % தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சியாக ஈச்சங்கால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் 2-வது தவணை தடுப்பூசி 187 நபர்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக தடுப்பூசி செலுத்தியதில் 100 சதவிதம் இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்றத்தலைவர் ஏழுமலை என்பவருக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளையும், சுகாதாரத் துறை சார்பாக வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இவருடன் இணைந்து செயல்பட்ட ஊராட்சி மன்றத் துணை தலைவர்மற்றும் செயலர், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |