Categories
தேசிய செய்திகள்

“ஹோலி கொண்டாட்டம்” போதையில் கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

 

மத்தியப் பிரதேசத்தில், பங்கங்கா பகுதியில் சென்ற வியாழக்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயது இளைஞர் ஒருவர் தவறுதலாக தன்னைத்தானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அதிக குடிபோதையில் இருக்கும் கோபால் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொள்வதைக் காணலாம். https://twitter.com/Anurag_Dwary/status/1505070217734811649 

இதையடுத்து கோபாலின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . ஹோலி கொண்டாட்டத்தின்போது நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |