ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டின் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியில் வந்தார். ஹேம்நாத்தின் ஜாமினை ரத்து செய்ய கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை ஐகோர்ட்டின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “ஹேம்நாத் தனது நீண்ட கால நண்பர் .அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும்.
சித்ராவுக்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்துள்ளேன் . மற்றொரு நண்பர் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தன்னுடைய பணம் மற்றும் அடியாட்கள் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார். அவர் வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார். எனவே அவரது ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஹேம்நாத் , சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.