Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

சத்தீஸ்கர் மாநில அரசு பழைய பென்சன் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளது.

நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில்2022-2023 மூன்றாம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல்வர் பூபேஷ் பகெல், அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் வரும் நிதியாண்டில் தொடரும் என அறிவித்துள்ளார். பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.

இது அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். இந்நிலையில் பழைய பென்ஷன் திட்டம் இன்னும் ஒரு நிதி ஆண்டுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து தற்போது இரண்டாவது மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை நீட்டித்துள்ளது சத்தீஸ்கர். பென்ஷன் திட்டம் மட்டுமல்லாமல் வேலை உருவாக்கம் தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ரோஜ்கார் திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது போல ராஜீவ் காந்தி பூமிஹின் க்ரிஷி மஜ்துர் நியாய் யோஜனா  திட்டத்திற்கான நிதி உதவியும் 6,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மற்றும் விவசாயிகள் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியிருக்கிறது. கிராம பொருளாதாரத்தை ஊக்குவிப்பது  குறித்தும் மாட்டு சாணத்தில் பயன்பாடு குறித்தும் முதல்வர் பூபேஷ் பேசியுள்ளார். மாட்டு சாணத்தால்  தயாரித்து கைப்பையில் தான் பட்ஜெட் உரையை அவர் எடுத்து வந்தார்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |