Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி அரசின் அனைத்து திட்டங்களும் பெறுவது ரொம்ப ஈசி….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசு பொதுமக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடையவும் அரசு வழிவகை செய்கிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் திட்டங்களுக்கு தகுதியானவர்களின் தரவுகள் உடனடியாக பெற்றிடவும் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் உடனடியாக சென்றடையும் விதமாகவும் இ- அலுவலக மையங்கள் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் இ அலுவலகங்கள் மூலமாக வழங்கி வரப்பட்ட அரசின் சேவைகள் 200 லிருந்து 300 உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசின் அலுவலகங்கள் மின்னணு அலுவலகங்களாக விரைவில் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இ-அலுவலக திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அரசு அலுவலகத்தில் காகித பயன்பாடு குறைக்கப்பட்டு பணிகளும் விரைவில் முடிவடையும் அதன் படி விரைவில் அனைத்து மாவட்டங்களில் அரசு துறை அலுவலகங்களில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |