மதுரையை பறந்துகொண்டே சுற்றிப்பார்க்கலாம் அதுபோன்ற வசதியை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் ஒருமுறையாவது சென்று விட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நேற்று முதல் 22-ம் தேதி வரை இது நடைபெறுகின்றது. மேலூர் சாலையில் தெற்குத்தெரு அருகே வைகை பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து இந்த ஹெலிகாப்டர் சேவை நடைபெறுகிறது. சுமார் 30 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒருவருக்கு ரூ, 5000 கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.