Categories
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்… 31 பேர் பலி… சமூக வலைத்தளங்கள் முடக்கம்.. பெரும் பரபரப்பு…!!!!!

ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில்  ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம் பெண் போலீஸ்காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதனை அமல்படுத்துவதற்காக ஹிஜாப் படை என்னும் தனிப்படை போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹிஜாபை முறைப்படி அணியாத அல்லது அதை அணியாத பெண்கள் மீது இந்த தனிப்படை வழக்கு பதிவு செய்து கைது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஹிஜாப் அணியாமல் சென்ற மாஷா அமினி (22) என்ற இளம் பெண் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ்காவிலிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக ஈரான் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பெண்ணுக்கு நீதி கேட்டு ஹிஜாபுக்கு எதிராகவும் ஈரான் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் இது நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே வருகிறது. தலைநகர் டெக்கான் உட்பட 13 நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களும் பாதுகாப்பு படைகளும் இடையே பல மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 31 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் போலீசாரும் அடங்குவார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடைகளை விதித்து வருகின்றது போராட்டம் பரவுவதை தடுப்பதற்காக இணையதள சேவையும் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பயன்பாடுகளும் முடக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |