ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும் கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே தங்களது நாடுகளுக்கு திரும்பி கொண்டு உள்ளனர்..
இந்நிலையில் இந்திய அணியும் நாடு திரும்ப ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தது.. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் வந்தார்.. அப்போது அனைத்து வீரர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்..
ஹர்திக் பாண்டியாவை சோதனை செய்தபோது, அவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள் இருந்தது.. அதனை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.. உரிய ரசீது இல்லாத காரணத்தால் கைப்பற்றியதாக மும்பை சுங்க துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.. அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது..
மரகத கற்கள் மற்றும் பிளாட்டினம் ஆகியவையால் செய்யப்பட்ட கடிகாரங்கள் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.