Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

ஹத்ராஸ் சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்குமாறு உ.பி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் பணி வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஹத்ரஸில் இருந்து உத்தரபிரதேசத்திலேயே ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியலின பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். ஆனால் சிறுமியின் உடலை உடனடியாக தகனம் செய்ய போலீசார் வற்புறுத்துவதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |