ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலை தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகின்றது.
இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரம், செடி போன்றவை எரிந்து சாம்பலாக இருக்கின்றது. கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக காட்டு தீ கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஸ்பெயின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு இருக்கின்றனர்.