Categories
மாநில செய்திகள்

ஸ்ட்ரைக்கால் பேருந்து கிடைக்காமல் மாணவர்கள் அவதி?…. பள்ளிக்கல்வித்துறை அளித்த விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பெருமளவு பேருந்துகள் இயங்காததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாலும், அரசுப் பேருந்துகள் போதியளவு இயக்கப்படுவதாலும் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதற்கிடையே தொமுச பொருளாளர் நடராஜன், நாளை போராட்டம் தொடர்ந்தாலும் அரசுப் பேருந்துகள் 60% வரை இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |