தாம்பரத்தில் லாரியிலிருந்து வாழை மர இலை கட்டுகள் விழுந்ததால் தனியார் பள்ளி ஊழியர் இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இவர் திருவேற்காட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு முன்னால் வாழைமர இலைகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. இதற்கிடையே லாரியிலிருந்து இலை கட்டுகள் சரிந்து பழனியின் மோட்டார் சைக்கிளின் மீது விழுந்துள்ளது.
இதனால் பழனி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர்கள் பழனியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.