ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது சரிதான் என கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண் தனது காதலன் அப்தாப் அமீன் என்பவருடன் வசித்து வந்தார். இதனையடுத்து அப்தாப் அமீன் திடீரென ஷர்த்தாவை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி ஷ்ரத்தா தனது காதலன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். மேலும் என்னை பல துண்டுகளாக வெட்டி விடுவேன் என கூறுகிறான்.
அவன் என்னை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே போல் தாக்கினான் என கூறியிருந்தார். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரஷீத் கான் என்பவர் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டது சரிதான் என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடம் நடத்தி விசாரணையில் அவரது உண்மையான பெயர் விகாஷ் குமார் என்பதும், அவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.