Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்… மீண்டும் அரிய தேர்வு… அனைவரும் பாஸ் ரத்து?…!!!

தமிழகத்தில் அரிய தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி பல்கலைக்கழக அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் மாணவர்களை பல கல்லூரிகள் அரியர் தேர்வு எழுத நிர்பந்தம் செய்துள்ளன. அதனால் கட்டாயம் அரியர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிகள் தேர்வு எழுத நிர்பந்தம் செய்வதாக மாணவர்கள் தங்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |