Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!!!!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஏகாதசியை  முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சில விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்வதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை சென்னை – எழும்பூர் மதுரை வைகை விரைவு ரயில் மாலை 6 :08 மணி முதல் 6:10 மதுரை சென்னை – எழும்பூர் வைகை விரைவு ரயில் காலை 9:38 மணி முதல் 9:40 மணி வரை நின்று செல்லும். இதேபோல் கொல்லம் – சென்னை எழும்பூர் இரவு 9:38 முதல் 9:40 வரை சென்னை – எழும்பூர் கொல்லம் இரவு 9:18 முதல் 9:20 வரையிலும் நிற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |