தமிழகத்தில் வேல் யாத்திரையால் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும். வேல்யாத்திரையாம் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் கோவிலுக்கு செல்லாதவர்கள் கூட தற்போது கோவிலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணி யால் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.