7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழரசி 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார்.
ஆனால் கூறியபடி அவர் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆரோக்யராஜ் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் தமிழரசி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து ஆரோக்கியராஜ் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசியை கைது செய்தனர்.