வேலை இல்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகே உள்ள அஷ்டலட்சுமி நகரில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய்தொற்று காரணமாக சில மாதங்களாக வேலையின்றி இருந்து வருகிறார். இதனையடுத்து வீட்டில் வருமானமின்றி இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போத்தனூர் காவல்துறையினர் ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.